Published : 14 Sep 2021 03:14 AM
Last Updated : 14 Sep 2021 03:14 AM
சென்னை மாநகராட்சி சார்பில் இதுவரை 45 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 30 லட்சத்து 5 ஆயிரத்து 508 முதல் தவணை கரோனா தடுப்பூசி, 13 லட்சத்து 50 ஆயிரத்து 60 இரண்டாம் தவணை தடுப்பூசிஎன மொத்தம் 43 லட்சத்து 55 ஆயிரத்து 568 தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி போடும் வகையில், தீவிர தடுப்பூசி இயக்கம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாநகராட்சிப் பகுதிகளில் நேற்று முன்தினம் 1,600 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இவற்றில் 600 மருத்துவர்கள், 600 செவிலியர்கள் பணியாற்றினர். 98,227 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி, 93 ஆயிரத்து 123 பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசி என மொத்தம் 1 லட்சத்து 91 ஆயிரத்து 350 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை 31 லட்சத்து 3 ஆயிரத்து 735 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி, 14 லட்சத்து 43 ஆயிரத்து 183 பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசி என மொத்தம் 45 லட்சத்து 46 ஆயிரத்து 918 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதேபோல, அவ்வப்போது பெரிய அளவிலான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT