Published : 14 Sep 2021 03:14 AM
Last Updated : 14 Sep 2021 03:14 AM

ரூ.1.30 லட்சம் புகையிலை பறிமுதல் :

கடலூர் முதுநகர் பாலக்கரையில் முருகேஷ் (30), என்பவரது கடையிலும், அவரது நண்பரான மணிகண்டன் வீட்டிலும் தனிப்படை போலீஸார் சோதனை நடத்தினர்.

இதில் ரூ.70 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக முருகேஷ் மற்றும் அவரது கடையில் வேலை பார்க்கும் பாகூர்கொம்யூனைச் சேர்ந்த ரஞ்சித் (19) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதே போல் ஆலப்பாக்கத்தில் ரூ.60 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக ஐயம் பெருமாள் (38), தேவ நாதன் (42) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x