Published : 13 Sep 2021 03:14 AM
Last Updated : 13 Sep 2021 03:14 AM

ஏரி நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு :

மாரண்டஅள்ளி அருகே ஏரி நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தார்.

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி வாணியர் தெருவைச் சேர்ந்த விவசாயி சண்முகம். இவரது மகன் வசந்தகுமார் (13). இவர் பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி யில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை தனது நண்பர் களுடன் அப்பகுதியில் உள்ள செவத்தம்பட்டி ஏரிக்கு சென்று குளித்தார். அப்போது, எதிர்பாராத விதமாக வசந்தகுமார் ஆழமான பகுதிக்கு சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

தகவல் அறிந்து அங்கு சென்ற மாரண்டஅள்ளி போலீ ஸார் சிறுவனின் உடலை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x