Published : 12 Sep 2021 03:20 AM
Last Updated : 12 Sep 2021 03:20 AM

குடியரசு துணைத் தலைவர் இன்று புதுச்சேரி வருகை :

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு புதுச்சேரிக்கு இன்று வருகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு 3 நாள் பயணமாக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புதுச்சேரி வருகிறார்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.7.67 கோடி செலவில் சோலார் பேனல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சூரிய மின்சக்தி திட்டத்தின் தொடக்க விழா இன்று (செப். 12) ஜிப்மர் வளாகத்தில் உள்ள டாக்டர் அப்துல்கலாம் கலையரங்கில் நடக்கிறது.

இவ்விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

இதைத்தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் மதிய உணவு அருந்தும் குடியரசு துணைத் தலைவர், அரவிந்தர் ஆசிரமம் செல்கிறார். இரவு ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார். நாளை (செப்.13) புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறும் விழாவில் பங்கேற்று புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை திறந்து வைக்கிறார். புதிய கட்டிட திறப்பு விழாவிலும் பங்கேற்கிறார்.

அதைத்தொடர்ந்து புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக விழாவில் பங்கேற்று அங்கு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சூரியஒளி மின் பயன்பாட்டு திட்டத்தை வெங்கய்ய நாயுடு தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். பின்னர் ஆளுநர் மாளிகைக்கு செல்லும் அவர் அங்கு ஓய்வெடுத்துவிட்டு மறுநாள் 14-ம் தேதி காலை சென்னை புறப்படுகிறார்.

குடியரசு துணைத் தலைவர் வருகையையொட்டி புதுச்சேரி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டுள்ளது. விழாக்கள், நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள் மட்டுமின்றி அவர் ஓய்வெடுக்கும் ஆளுநர் மாளிகையும் காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

மாநில எல்லைகளில் போலீஸார்தீவிர வாகன சோதனை நடத்திவருகின்றனர். இந்திய கடலோரகாவல் படையினரும், புதுச்சேரிகடலோர காவல் பிரிவு போலீஸா ரும் கடற்கரை பகுதிகளில் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு பணிகளில் 1,000-க்கும்மேற்பட்ட போலீஸார் ஈடுபடுத் தப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x