Published : 12 Sep 2021 03:20 AM
Last Updated : 12 Sep 2021 03:20 AM
கடலூர் மாட்டம் விருத்தாசலத்தை அடுத்த பா.எடக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்யராஜ் (42). இவரது மனைவி பாக்யலட்சுமி (35). இவர்களதுமகள் திவ்யா(17), மகன் திவாகர் (15). பாக்யராஜ்மதுவுக்கு அடிமையாகி, குடும்பத்தை கவனிக்காமல்இருந்து வந்தார்.
குடும்பத்தினர் எவ்வளவோ எடுத்துக்கூறியும்,அவர் தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார். இதனால் குடும்பத்தை நடத்த திணறிய பாக்யலட்சுமி, தனது இரு பிள்ளைகளுடன் வீட்டின் அருகில் உள்ள முந்திரித் தோப்பில் நேற்று முன்தினம் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த ஆலடி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, 3 பேரின் சடலங்களை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT