Published : 12 Sep 2021 03:21 AM
Last Updated : 12 Sep 2021 03:21 AM
விளாத்திகுளம் அருகே வேம்பார் பகுதியில் கடந்த 28-ம் தேதி டிராக்டரில் ஆற்று மணல் திருடிய வழக்கில் டிராக்டர் ஓட்டுநர் கன்னிராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (57), டிராக்டர் உரிமையாளர் வேம்பார் சிந்தாமணி நகரைச் சேர்ந்த முத்தழகு (57) மற்றும் இவரது கார் ஓட்டுநர் திரவியபுரத்தை சேர்ந்த முனீஸ்வரன் (38) ஆகிய 3 பேரை சூரங்குடி போலீஸார் கைது செய்தனர்.
இதுபோல் கடந்த மாதம் 10-ம்தேதி விளாத்திகுளம் மீரான் பாளையம் பகுதியில் உள்ள கோயிலுக்குள் புகுந்து சாமி கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த 5 பவுன் செயின் திருடிய கோவில்பட்டி தட்சிணாமூர்த்தி தெருவைச் சேர்ந்த கண்ணன் (43), டால்துரை பங்களா தெருவை சேர்ந்த சண்முகவேல் மனைவி செண்பகவள்ளி என்ற ராணி (55), சங்கரன்கோவில் ஈச்சந்தா பகுதியை சேர்ந்த அருட்செல்வம் மனைவி சண்முகசுந்தரி (32) ஆகிய 3 பேரை விளாத்திகுளம் போலீஸார் கைது செய்தனர்.
முத்தழகு, கண்ணன் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து இருவரையும் விளாத்திகுளம் காவல் ஆய்வாளர் கலா குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT