Published : 12 Sep 2021 03:21 AM
Last Updated : 12 Sep 2021 03:21 AM

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் - 8,672 மாணவர்கள் ‘நீட்’ தேர்வு எழுதுகின்றனர் : இன்று 16 மையங்களில் நடைபெறுகிறது

வேலூர் அடுத்த அரியூர் ஸ்பார்க் பள்ளியில் ‘நீட்’ தேர்வு மையத்தை தேர்வு ஒருங்கிணைப்பாளரும், சிருஷ்டி பள்ளி முதல்வருமான சரவணன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

வேலூர்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் 16 மையங்களில் இன்று ‘நீட்’ தேர்வு நடைபெற உள்ளது. இதில், 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுத உள்ளனர்.

மருத்துவப் படிப்பில் சேருவ தற்கான ‘நீட்’ தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2 மையங்களிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 2 மையங்களிலும், வேலூர் மாவட் டத்தில் 12 மையங்கள் என மொத்தம் 16 மையங்களில் இன்று ‘நீட்’ தேர்வு நடைபெற உள்ளது. பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வுகள் நடைபெறுகிறது.

தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகள் முகக்கவசம், கையுறை, இருக்கம் இல்லாத ஆடைகளை அணிந்து வர வேண்டும். ஜீன்ஸ் பேண்ட், சல்வார், நீளமான ஸ்கர்ட், டி-சர்ட், டிரவுசர், சாதாரண சட்டை ஆகியவற்றை அணியலாம். முழுக்கை சட்டை, பெரிய, பெரிய பட்டன்கள் கொண்ட சட்டை, அடர் நிறம் கொண்ட ஆடைகளை அணியக்கூடாது. அதேபோல, ஷூ மற்றும் கைக்கடிகாரம் அணியக்கூடாது.

மாணவிகள் தங்க நகைகளை அணிந்து வரக்கூடாது. தேர்வுக்கு தேவையான எழுதுப்பொருட்கள், தண்ணீர் பாட்டில், ஹால் டிக்கெட் ஆகியவற்றை எடுத்துவர வேண்டும். அரசு வழங்கிய அடை யாள அட்டை கட்டாயம் இருக்க வேண்டும். செல்போன், புளூடூத், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னனு சாதனப்பொருட்கள் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் காரணமாக ஒவ்வொரு தேர்வு மையத்தின் நுழைவு வாயிலில் மாணவர்களின் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்படும்.

ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் தேர்வு எழுதும் மாண வர்களுக்கு கருப்பு, வெள்ளை நிறத்தில் கேள்வித்தாள்களும், தமிழ் மொழியில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பச்சை நிறத்தில் கேள்வித்தாள்கள் வழங் கப்படும். ஒவ்வொரு தேர்வு மையத்தில் ஒரு உதவி காவல் ஆய்வாளர் தலைமையில் 7 காவலர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கேள்வி மற்றும் விடைத்தாள்கள் பாது காப்புடன் கொண்டு செல்ல துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ‘நீட்’ தேர்வு ஒருங்கிணைப் பாளரும், வேலூர் சிருஷ்டி மேல் நிலைப்பள்ளியின் முதல்வருமான சரவணன் நேற்று வேலூரில் உள்ள ‘நீட்’ தேர்வு மையங்களில் மேற் கொள்ளப்பட்டுள்ள முன்னேற் பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் அவர் கூறும்போது, "வேலூர் மாவட்டத்தில் 12 மையங் களில் ‘நீட்’ தேர்வு நடைபெற உள்ளது. அதில், வேலூர் விஐடி பல்கலையில் 900 மாணவர்களும், காட்பாடி சன்பீம் மெட்ரிக் பள்ளியில் 720 மாணவர்களும், சென்னாங்குப்பம் வித்யாலட்சுமி பள்ளியில் 720 மாணவர்களும், காட்பாடி சிருஷ்டி வித்யாஷரம் பள்ளியில் 600 மாணவர்களும், சாயிநாதபுரம் கிருஷ்ணசாமி மேல்நிலைப்பள்ளியில் 540 மாணவர்களும், கிங்ஸ்டன் பொறி யியல் கல்லூரியில் 540 மாண வர்களும், சிருஷ்டி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் 480 மாணவர்களும், கிங்ஸ்டன் இன்டர்நேஷனல் பள்ளியில் 420 மாணவர்களும், அரியூர் ஸ்பார்க் மெட்ரிக் பள்ளியில் 420 மாணவர்களும், நாராயணி வித்யாஷரம் மேல்நிலைப்பள்ளியில் 212 மாணவர்களும், அரியூர் ஸ்பார்க் சீனியர் செகண்டரி பள்ளியில் 420 மாணவர்களும், வேலூர் டிகேஎம் மகளிர் கல் லூரியில் 300 மாணவர்களும் என மொத்தம் 6,272 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

அதேபோல, ராணிப்பேட்டை மாவட்டத்தில் டிஏவி பெல் பள்ளியில் 360 மாணவர்களும், மேல் விஷாரம் குளோபல் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில் 240 மாணவர்களும் என மொத்தம் 600 பேரும், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மருதர் கேசரிஜெயின் மகளிர் கல்லூரி யில் 900 மாணவர்களும், ஏலகிரி மலையில் உள்ள டான்போஸ்கோ கல்லூரியில் 900 மாணவர்களும் என மொத்தம் 1,800 பேரும், ஒருங் கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 8,672 மாணவர்கள் இன்று நீட் தேர்வு எழுத உள்ளனர். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னேற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் அச்சமின்றி நல்ல முறையில் தேர்வு எழுத வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x