Published : 10 Sep 2021 05:57 AM
Last Updated : 10 Sep 2021 05:57 AM
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது:
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 43,263 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இது முந்தைய நாளை விட 14 சதவீதம் அதிகமாகும். கடந்த 24 மணி நேரத்தில் 509 பேர் உயிரிழந்தனர். மொத்த நோயாளிகளில் 1.19 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர். 97.48 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். தினசரி பாசிட்டிவ் விகிதம் 2.38 சதவீதமாக உள்ளது.
கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 30,196 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 181 பேர் உயிரிழந்தனர். தினசரி பாசிட்டிவ் விகிதம் 16 சதவீதத்தில் இருந்து புதன்கிழமை 17.63 சதவீதமாக உயர்ந்தது.
மகாராஷ்டிராவில் புதிதாக 4,174 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 65 பேர் உயிரிழந்தனர். மாநிலத்தில் அதிகபட்சமாக அகமதுநகர் மாவட்டத்தில் 786 பேருக்கும் இதையடுத்து புனே மாவட்டத்தில் 529 பேருக்கும் புதிதாக தொற்று ஏற்பட்டது. மாநிலத்தில் தற்போது 47,880 நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர்.
டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 41 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 14 லட்சத்து 38,082 ஆக உயர்ந்துள்ளது.
72 கோடியை தாண்டியது
நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 72 கோடியை கடந்துள்ளது. இந்தியா 10 கோடி தடுப்பூசிகளை தொடுவதற்கு 85 நாட்களும் 20 கோடியை தொடுவதற்கு அடுத்த 45 நாட்களும் 30 கோடியை எட்டுவதற்கு அடுத்த 29 நாட்களும் எடுத்துக் கொண்டதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.30 கோடி டோஸ்களில் இருந்து40 கோடி டோஸ்களை எட்ட 24நாட்களை நாடு எடுத்துக்கொண்டது. அடுத்த 20 நாட்களில் அதாவது ஆகஸ்ட் 6-ம் தேதி 50 கோடி டோஸ்களை எட்டியது.
கடந்த 2019 டிசம்பரில் சீனாவில் இருந்து கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதல் உலகில் அதன் நோய்த் தொற்றுக்கு 45 லட்சத்து 29,715 பேர் உயிரிழந்தனர். கரோனா தொற்றுக்கு உலகில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில் 6 லட்சத்து 52,654 பேரும், இதையடுத்து பிரேசிலில் 5 லட்சத்து 84,421 பேரும் இந்தியாவில் 4 லட்சத்து 41,749 பேரும் உயிரிழந்தனர். தொடர்ந்து மெக்சிகோவில் 2,65,420 பேரும் பெருவில் 1,98,595 பேரும் உயி ரிழந்தனர்.-பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT