Published : 10 Sep 2021 05:58 AM
Last Updated : 10 Sep 2021 05:58 AM
தாம்பரம் வனச்சரகத்துக்கு உட்பட்ட அகரம் தென் ஏரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சில தினங்களாக துப்பாக்கி சுடும் சத்தம் கேட்பதாகவும் பறவைகள் உள்ளிட்ட உயிரினங்களை சிலர்வேட்டையாடுவதாகவும் வனத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.
இதையடுத்து தாம்பரம் வனத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். நேற்று முன்தினம் மாலை ஏரிக்கரை பகுதியில் நாட்டு துப்பாக்கிகளுடன் இருவர் சுற்றித் திரிவதை கண்டனர். வனத்துறையினரை கண்டவுடன் அவர்கள் ஒட்டம் பிடித்தனர். அவர்களை பிடித்து விசாரித்ததில் இருவரும் சேலையூரை அடுத்த மப்பேடு பகுதியைச் சேர்ந்த கிரிமணி(35), சுமன்(21) என தெரியவந்தது. கரோனாவால் வேலையின்றி நீர்க்காகங்களை வேட்டையாடி வந்ததாக வனத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இருவரையும் நேற்று காலை கைது செய்த வனத்துறையினர் அவர்கள் வேட்டையாடி வைத்திருந்த நீர்க்காகங்களின் உடல்களை மீட்டனர்; அவர்கள் பயன்படுத்திய நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT