Published : 10 Sep 2021 05:58 AM
Last Updated : 10 Sep 2021 05:58 AM

வழிப்பறி திருடர்களை விரட்டி பிடித்த போலீஸாருக்கு பாராட்டு :

மதுரை

மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த மூர்த்தி மனைவி சொர் ணவல்லி (38). நேற்று முன்தினம் மாலை அவனியாபுரம்-செம் பூரணி சாலையில் நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த இருவர் சொர்ணவல்லி கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் சங்கிலியைப் பறித்துத் தப்பினர்.

தகவலறிந்த அவனியாபுரம் போலீஸார் நகர் முழுவதும் உள்ள சோதனைச்சாவடிகளில் வாகனத் தணிக்கைக்கு உஷார் படுத்தினர்.

இந்நிலையில், மதிச்சியம் பகுதியில் வாகனத் தணிக்கை போலீஸாரை கண்டதும் தப்பிய இருவரை எஸ்ஐ நாகராஜன், காவலர்கள் மன்மதன், ராஜசேகர் ஆகியோர் மடக்கிப் பிடித்தனர்.

விசாரணையில், திருப்பு வனத்தைச் சேர்ந்த ஹரிகரன், வில்லாபுரத்தைச் சேர்ந்த சபரி என்பதும் சொர்ணவல்லியிடம் நகையைப் பறித்தவர்கள் என்பதும் தெரிந்தது. இரு வரையும் அவனியாபுரம் போலீ ஸார் கைது செய்தனர்.

போலீஸாரை மாநகர் காவல் ஆணையர் பிரேம்ஆனந்த் சின்ஹா பாராட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x