Published : 10 Sep 2021 05:58 AM
Last Updated : 10 Sep 2021 05:58 AM
ராஜபாளையத்தில் வழிவிடு விநாயகர் கோயிலில் வைத்து வழிபடும் சிலைகளை நீர் நிலையில் கரைக்க அனுமதி கோரிய மனு தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றத் தலை வர் ராமராஜ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவும், சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.
ராஜபாளையம் வழிவிடு விநாயகர் கோயிலில் 6 விநாயகர் சிலைகள் வைத்து வழிபடவும், அவற்றை நீர் நிலையில் கரைக்கவும் அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்டக் காவல் கண் காணிப்பாளரிடம் மனு அளித்தோம். இதுவரை அனுமதி தரவில்லை. எனவே, கரோனா வழிமு றைகளைப் பின்பற்றி 6 விநாயகர் சிலைகளை வைக்கவும், அவற்றை டிராக்டரில் எடுத்துச் சென்று நீர் நிலையில் கரைக்கவும் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறி உள்ளார்.
இந்த மனு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரரின் வழக்கறிஞர் வாதி டுகையில், கோயிலில் விநாயகர் சிலை வைக்கவும், கரைக்கவும் அனுமதி கேட்கிறோம் என்றார்.
இதையடுத்து நீதிபதி, விநாயகர் சிலைகளை கரைக்க மனுதாரர் நடவடிக்கை எடுக்கக் கூடாது. மனு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசா ரணையை செப்.16-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT