Published : 09 Sep 2021 03:13 AM
Last Updated : 09 Sep 2021 03:13 AM
துப்பாக்கியுடன் நின்ற தலிபான் தீவிரவாதி ஒருவரை பெண் ஒருவர் நேருக்குநேர் எதிர்கொள்ளும் புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து அந்த நாட்டை தலிபான் தீவிரவாதிகள் வசமாக்கியுள்ளனர்.
இந்நிலையில் தலிபான்களின் செய்தித்தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் காபூலில் நேற்றுமுன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, “ஆப்கானிஸ்தானில் அமையும் தலிபான்களின் இடைக்கால அரசில் முல்லா முகம்மது ஹசன் அகுந்த் பிரதமராகவும், தலிபான் தலைவர் முல்லா பராதர், துணைப் பிரதமராகவும் இருப்பார்” என்றார்.
இந்நிலையில் தலிபான்களின் அடக்குமுறைக்கு எதிராக நேற்று முன்தினம் தலைநகர் காபூலில் பெண்கள்பேரணி நடத்தினர். மொத்தம் 3 இடங்களில் இந்தப் பேரணி நடைபெற்றது. அப்போது தலிபான்களை எதிர்த்து அவர்கள் கோஷம் எழுப்பினர். பயங்கர ஆயுதங்களுடன் தலிபான்கள் நகரை வலம்வந்தபோதும் அவர்களைப் பார்த்துப் பயப்படாமல் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது துப்பாக்கியுடன் நின்ற தலிபான் தீவிரவாதி ஒருவரை பெண் ஒருவர் நேருக்கு நேர் எதிர்த்து நின்றார். இந்த புகைப்படத்தை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன புகைப்படக் கலைஞர்எடுத்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து ஆப்கனைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜாஹ்ரா ராஹிமி கூறும்போது, “1989-ல் சீனாவுக்கு எதிராக தியானன்மென் சதுக்கம் பகுதியில் நடந்த கிளர்ச்சியின்போது சீன ராணுவ கவச வாகனங்களை எதிர்த்து இளைஞர்கள் நின்றனர். அதை நினைவுபடுத்துவதாக இந்த புகைப்படம் அமைந்துள்ளது. ஆயுதம்தாங்கிய தலிபானைப் பார்த்து பயப்படாமல் அந்த பெண் நின்றார். அந்த பெண்ணை நோக்கி தலிபான் தீவிரவாதி குறி பார்த்தபோதும் அவர்பயப்படவில்லை. இந்த புகைப்படம்தான் தற்போது சமூக வலைதளங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT