Published : 09 Sep 2021 03:14 AM
Last Updated : 09 Sep 2021 03:14 AM

தமிழகம், புதுவையில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு :

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி பா.கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக 9-ம்தேதி முதல் 12-ம் தேதி வரைதமிழகம் மற்றும் புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும்.

8-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 9 செமீ, தேவாலாவில் 6 செமீ, அவலாஞ்சியில் 5 செமீ, கூடலூர் சந்தை, நடுவட்டம் ஆகிய இடங்களில் தலா 4 செமீ மழை பதிவாகிஉள்ளது.

9-ம் தேதி தென்கிழக்கு, மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளிலும், 10 முதல் 12-ம் தேதி வரை மத்திய வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்கக் கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளிலும் மணிக்கு 40 முதல் 60 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்றுவீசக் கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x