Published : 07 Sep 2021 03:13 AM
Last Updated : 07 Sep 2021 03:13 AM

புதிதாக 1,556 பேருக்கு கரோனா தொற்று :

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 885, பெண்கள் 671 என மொத்தம் 1,556 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக கோவையில் 206,சென்னையில் 169, செங்கல்பட்டில் 110, தஞ்சாவூரில் 104 பேர்பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 26 லட்சத்து 24,234 ஆகஅதிகரித்துள்ளது.

இதுவரை 25 லட்சத்து 72,942 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 1,564 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகம் முழுவதும் 16,256 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் நேற்று நடுத்தர வயதினர், முதியவர்கள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 35,036 ஆகஉயர்ந்துள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x