Published : 06 Sep 2021 03:14 AM
Last Updated : 06 Sep 2021 03:14 AM
தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்புவரையிலான பாடப் புத்தக்கங்களை அச்சிடும் பணியை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, 2021-22-ம் கல்வியாண்டுக்கான பாடப் புத்தகங்களை அச்சிடும் பணி கடந்த மே மாதம் நிறைவடைந்தது. தொடர்ந்து, அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக 3.07கோடி புத்தகங்கள் வழங்கப்பட்டன.
அதேபோல, தனியார் பள்ளிகள்விற்பனைக்காக 1.5 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டு, மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்பட்டன. அவற்றில் சுமார் 1.1 கோடி புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து பாடநூல் கழக அதிகாரிகள் கூறும்போது, "அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 7-ம் வகுப்பு வரைபடிக்கும் மாணவர்களுக்கு முதல்பருவப் புத்தகங்கள், 8 முதல் 12-ம்வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முழு ஆண்டு புத்தகங்கள் என ரூ.147 கோடி மதிப்பில், 3.07 கோடி பாடநூல்கள் இதுவரை விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
இதுதவிர, தனியார் பள்ளிகள்மற்றும் போட்டித் தேர்வுக்குப் பயிற்சி பெறும் மாணவர்களுக்காக 1.5 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டன. அவற்றில் 1.1 கோடிபுத்தகங்கள் விற்பனையாகியுள் ளன. அதன் மூலம் ரூ.64 கோடி வருவாய் கிடைத்துள்ளது. தொடர்ந்து, இரண்டாம் பருவபாடப் புத்தகங்கள் அச்சிடுதல் பணிகள் தற்போது முடுக்கிவிடப் பட்டுள்ளன" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT