Published : 06 Sep 2021 03:14 AM
Last Updated : 06 Sep 2021 03:14 AM

புதிதாக 1,592 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று :

தமிழகத்தில் புதிதாக 1,592 பேருக்குகரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 885, பெண்கள் 707 என மொத்தம் 1,592 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக கோவையில் 229, சென்னையில் 165, செங்கல்பட்டில் 127, ஈரோட்டில் 104 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 26 லட்சத்து 22,678-ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 25 லட்சத்து 71,378 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 1,607 பேர் குணமடைந்து, வீடுகளுக்குத் திரும்பினர். தமிழகம் முழுவதும் 16,282 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

18 பேர் உயிரிழப்பு

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று நடுத்தர வயதினர், முதியோர் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனா வால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,018-ஆக உயர்ந்துள் ளது.

சென்னையில் மட்டும் 8,410 பேர் இறந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x