Published : 04 Sep 2021 03:14 AM
Last Updated : 04 Sep 2021 03:14 AM

‘அரசு கல்லூரி மாணவர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள்’ :

உடுமலை

உடுமலை அரசு கலைக் கல்லூரி கடந்த 1-ம் தேதி முதல் செயல்படதொடங்கியுள்ளது. மாணவர்கள் வரத்தொடங்கியுள்ள நிலையில்,பேருந்து வசதி இல்லாததால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியநிலையுள்ளது. இதையடுத்து கல்லூரி நேரத்தின் போது கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என உடுமலை போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் மணிகண்டன் கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது ‘‘உடுமலை கிளையில் இருந்து 36 புறநகர் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நகர பேருந்துக்குரிய 94 வழித்தடங்களில் 58 நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கரோனாஊரடங்கால் தற்போது 48 பேருந்துகள் மட்டும்இயக்கப்படுகின்றன. அரசுக்கல்லூரி மார்க்கமாக அமராவதி, திருமூர்த்தி பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள்வழக்கம்போல இயக்கப்படுகின்றன. மாணவர்களின் தேவையை கருத்தில் கொண்டு கல்லூரி நேரத்தை கணக்கிட்டு கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x