Published : 03 Sep 2021 03:14 AM
Last Updated : 03 Sep 2021 03:14 AM

தமிழகத்தில் புதியதாக 1,562 பேருக்கு கரோனா :

தமிழகத்தில் நேற்று புதியதாக 1,562 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில், ஆண்கள் 890 பேர், பெண்கள் 672 பேர். அதிகபட்சமாக கோவையில் 215 பேருக்கும், சென்னையில் 166 பேருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 16,478 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று மட்டும் 20பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 961 ஆக உயர்ந்துள்ளது. இதில்,சென்னையில் மட்டும் 8 ஆயிரத்து 404 பேர் இறந்துள்ளனர் என்றுதமிழக சுகாதாரத் துறை தெரி வித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x