Published : 02 Sep 2021 03:13 AM
Last Updated : 02 Sep 2021 03:13 AM
விஜயவாடா: ஆந்திர மாநிலத்தில் ஜனசேனா கட்சி தலைவரும், நடிகர் சிரஞ்சீவியின் தம்பியுமான பவன் கல்யாண் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டியுள்ளார்.
ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது:
எந்த கட்சியாக இருந்தாலும், ஆட்சியை பிடிக்க வேண்டுமானால் அரசியல் செய்ய வேண்டும். ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர் அரசியல் செய்ய கூடாது. இதனை வார்த்தைகளால் அல்ல, செயல்களால் நீங்கள் (முதல்வர்) செய்து வருகிறீர்கள். உங்களது ஆட்சியின் நிர்வாக திறன், செயல்பாடுகள் உங்கள் மாநிலத்துக்கு மட்டுமல்லாது, பிற மாநிலங்களுக்கும் ஊக்கம் அளிக்கும் விதமாக உள்ளது. உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு நடிகர் பவன் கல்யாண் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT