Published : 01 Sep 2021 03:16 AM
Last Updated : 01 Sep 2021 03:16 AM
உதகை: ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை, அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கான சட்ட மசோதாவை நிறைவேற்றிய திமுக அரசைக் கண்டித்தும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், நீலகிரி மாவட்ட அதிமுக சார்பில் உதகை காபி ஹவுஸ் சந்திப்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அதிமுக மாவட்டச் செயலாளர் கப்பச்சி டி. வினோத் தலைமை வகித்தார். அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT