Published : 31 Aug 2021 03:14 AM
Last Updated : 31 Aug 2021 03:14 AM

தேசிய விளையாட்டு தின விழா :

திருச்சி: இந்தியாவின் சிறந்த ஹாக்கி வீரராக திகழ்ந்த தியான் சந்த்தை பெருமைப்படுத்தும் விதமாக அவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 29-ம் தேதி தேசிய விளையாட்டு தினமாகக் கொண்டாடப்படுகிறது.

அதன்படி, திருச்சி தேசிய கல்லூரியின் உடற்கல்வி துறை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் நேற்று முன்தினம் நீதிமன்ற சாலையில் மனிதசங்கிலியாக அணிவகுத்து நின்று விளையாட்டு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சிறப்பு விருந்தினராக காவல் உதவி ஆணையர் அஜய் தங்கம் பங்கேற்று விளையாட்டின் முக்கியத்துவம் குறித்தும், மாணவர்கள் விளையாட்டில் தங்கள் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்வது குறித்தும் வலியுறுத்தினார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி துறைத் தலைவர் பிரசன்னா பாலாஜி உள்ளிட்டோர் செய்திருந்தனர். இந்நிகழ்வில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x