Published : 28 Aug 2021 03:12 AM
Last Updated : 28 Aug 2021 03:12 AM
தன்னை ஓவியமாக தீட்டிய பெங்களூரு கல்லூரி மாணவரை பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சியோடு பாராட்டி கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘பெங்களூருவை சேர்ந்த கல்லூரி மாணவர் ஸ்டீபன் ஹாரீஸ் (20) கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அதில், 'பிரதமர் நரேந்திரமோடி கரோனா நெருக்கடி காலத்தை மிகவும் திறம்பட கையாண்டதால் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டது. அதிலும் கரோனா தொற்றுக்கான தடுப்பூசியை குறுகிய காலத்தில் வலுவான பிரச்சாரம் மூலம் நாட்டு மக்களிடையே கொண்டு சேர்த்தார்'' என குறிப்பிட்டு இருந்தார்.பிரதமரின் பணிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தான் வரைந்த மோடியின் இரு ஓவியங்களையும் அனுப்பி வைத்தார்.
இந்த ஓவியங்களை பார்த்த மோடி, மாணவர் ஸ்டீபன் ஹாரீஸுக்கு பாராட்டு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில் மோடி, இந்த இளம்வயதில் படைப்பாற்றலில் ஆர்வமுடன் விளங்குவதை பாராட்டுகிறேன். ஓவியங்கள் ஸ்டீபனின் ஆழமான ரசனையை காட்டுகின்றது.
நுணுக்கத்துடன் நிகழ்த்தப்படும் கலை வெளிப்பாடுகள் எப்போதும் என் மனதைக் கவரும். பொது சுகாதாரம் குறித்த ஸ்டீபனின் நேர்மறையான எண்ணங்களுக்காக மக்களும் அவரை பாராட்டுவார்கள்’ என குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT