Published : 28 Aug 2021 03:15 AM
Last Updated : 28 Aug 2021 03:15 AM

முசிறி அரசு கல்லூரி பணியாளருக்கு கரோனா; மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தேதி மாற்றம் :

திருச்சி: திருச்சி மாவட்டம் முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வர் ராஜ்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

முசிறி அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் பணிபுரியும் அலுவலக பெண் பணியாளர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நேற்றும், இன்றும் கல்லூரிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், முதலாமாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறும் தேதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து துறை சார்ந்த ஆசிரியர்கள் துறைத் தலைவரிடம் தகவல் பெற்று அனைத்து மாணவ, மாணவிகளுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதன்படி, ஆக.27-ம் தேதி(நேற்று) நடைபெறவிருந்த கலந்தாய்வு ஆக.31-ம் தேதியும், ஆக.28-ம் தேதி(இன்று) நடைபெறவிருந்த கலந்தாய்வு செப்.1-ம் தேதியும், ஆக.31-ம் தேதி நடைபெறவிருந்த கலந்தாய்வு செப்.2-ம் தேதியும், செப்.1-ம் தேதி நடைபெறவிருந்த கலந்தாய்வு செப்.3-ம் தேதியும், செப்.2-ம் தேதி நடைபெறவிருந்த கலந்தாய்வு செப்.4-ம் தேதியும் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x