Published : 28 Aug 2021 03:15 AM
Last Updated : 28 Aug 2021 03:15 AM
கரூர்: கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 2-வது தளத்தில் பிரசவ வார்டு உள்ளது. இங்குள்ள கழிப்பறையில் நேற்று காலை உயிரிழந்த நிலையில் தொப்புள் கொடியுடன் பெண் சிசுவின் சடலம் கிடந்தது. தகவலறிந்த பசுபதிபாளையம் போலீஸார் அங்கு சென்று, சிசுவின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவரின் துணைக்கு வந்திருந்த கர்ப்பிணி ஒருவர், இந்த கழிப்பறையைப் பயன்படுத்தியபோது குழந்தை பிறந்ததும், இதனால் அச்சமடைந்து அந்த குழந்தையை கழிப்பறையிலேயே விட்டுச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த குழந்தை இறந்து பிறந்ததா என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT