Published : 26 Aug 2021 03:14 AM
Last Updated : 26 Aug 2021 03:14 AM

எம்எல்ஏ வீட்டை சேதப்படுத்திய யானைகள் : வனத்துறையை கண்டித்து மக்கள் மறியல்

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த பொன்னூர், நாடுகாணி ஆகிய கிராமங்களில், தொடர்ந்து 5-வது நாளாக காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து, வீடுகளை சேதப்படுத்தியுள்ளன. நேற்றுமுன்தினம் இரவு நாடுகாணி பகுதியில் உள்ள கூடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பொன்.ஜெயசீலன் வீடு உட்பட 2 வீடுகளை காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளன. காட்டு யானைகளைவனப்பகுதிக்குள் விரட்டக்கோரி நாடுகாணி ஜீன்பூல் மையம் முன்பு மறியல்போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர். யானைகளை விரட்டஉரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினர் உறுதியளித்ததால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x