Published : 25 Aug 2021 03:18 AM
Last Updated : 25 Aug 2021 03:18 AM
வேலூர்: வேலூர் மாவட்ட காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் 12 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் நேற்று பிறப்பித்துள்ளார். அதன்படி, கே.வி.குப்பம் கார்த்திக் காட்பாடிக்கும், அங்கு ஏற்கெனவே பணியாற்றி வந்த ஜெகதீசன், பாகாயத்துக்கும், வேலூர் தெற்கு (சட்டம்-ஒழுங்கு) மணிகண்டன் குடியாத்தம் நகருக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையம் காஞ்சனா, காட்பாடி பெண்கள் பிரிவுக்கும், வேலூர் கிராமியம் மனோகரன், விருதம்பட்டுக்கும், அங்கு ஏற்கெனவே பணியாற்றி வந்த மோகன், வேலூர் தெற்கு (சட்டம்-ஒழுங்கு), வேலூர் தெற்கு குற்றப்பிரிவு ரங்கநாதன், வேலூர் சரக கண்காணிப்பு பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
அதேபோல், மேல்பாடி சிங்காரம் பள்ளிகொண்டாவுக்கும், குடியாத்தம் கிராமியம் வேலாயுதம் பரதராமிக்கும், குடியாத்தம் கிராமியம் ஏழுமலை, அரியூருக்கும், அங்கு ஏற்கெனவே பணியாற்றி வந்த கிருஷ்ணமூர்த்தி, குடியாத்தம் நகரத்துக்கும், பொன்னை சவுந்தர்ராஜன் வேலூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT