Published : 24 Aug 2021 03:13 AM
Last Updated : 24 Aug 2021 03:13 AM
மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் ஐசிஎம்ஆர் நேற்று வெளியிட்ட புள்ளிவிவரம்:
கடந்த 24 மணி நேரத்தில் 25,072 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 160 நாட்களில் மிகக் குறைந்த எண்ணிக்கை இது. நாட்டின் மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 3 கோடியே 24 லட்சத்து 49,306 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 389 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண் ணிக்கை 4 லட்சத்து 34,756 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் தற்போது 3 லட்சத்து 33,924 பேர் சிகிச்சையில் உள்ளனர். நாட்டின் மொத்த நோயாளிகளில் 97.63 சதவீதம் பேர் குணம் அடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 44,157 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 16 லட்சத்து 80,626 ஆக உயர்ந்துள்ளது.
நாடு தழுவிய தடுப்பூசி செலுத்தும் பணியில் இதுவரை 58.25 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. கரோனா பரிசோதனையில் ஆகஸ்ட் 22 வரை 50 கோடியே 75 லட்சத்து 51,399 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 12 லட்சத்து 95,160 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
நாட்டின் மொத்த கரோனா நோயாளிகள் எண்ணிக்கை கடந்த ஆண்டு டிசம்பர் 19-ல் 1 கோடியை கடந்தது. இந்த ஆண்டு ஜூன் 23-ல் 3 கோடியையும் கடந்தது.
இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT