Published : 08 Aug 2021 03:19 AM
Last Updated : 08 Aug 2021 03:19 AM

கரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஓவிய போட்டி :

திருப்பத்தூர்/வாணியம்பாடி: கரோனா தடுப்பு நடவடிக்கையையொட்டி பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற ஓவியப்போட்டி திருப்பத்தூர், வாணியம்பாடி வட்டங்களில் நடைபெற்றன.

கரோனா 3-வது அலையை தடுக்கவும், பொதுமக்கள் கரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, திருப்பத்தூர் நகரில் உள்ள மேரி இமாகுலேட் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் மாணவிகள் பங்கேற்ற ஓவியப்போட்டியை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தொடங்கி வைத்தார்.

இதில், கரோனா தொற்று குறித்தும், அதன் மூலம் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ஓவியம் மூலம் மாணவிகள் வரைந்து அசத்தினர். மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா சிறந்த ஓவியங்களை தேர்வு செய்து மாணவிகளை பாராட்டினார். நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ், மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் செந்தில், மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல, வாணியம்பாடி வட்டம் காந்திநகர் அரசு நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் பங்கேற்ற ஓவியப்போட்டிகள் நடைபெற்றன.வாணியம்பாடி வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி கலந்து கொண்டு சிறந்த ஓவியங்களை தேர்வு செய்து மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x