Published : 07 Aug 2021 03:17 AM
Last Updated : 07 Aug 2021 03:17 AM
கல்லூரி பேராசிரியர்கள் வரும் 9-ம் தேதி முதல் பணிக்கு வர வேண்டும் என்று உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மாணவர்களுக்கு ஆன்லைனில் பருவத் தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
ஆக.9 முதல் ஆன்லைன் வகுப்பு
இந்நிலையில், அனைத்து கல்லூரிகளிலும் 2, 3, 4-ம் ஆண்டு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல்ஆன்லைனில் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. அதற்கு ஏதுவாகஅரசு, அரசு உதவிபெறும் மற்றும்தனியார் கல்லூரி பேராசிரியர்கள்அனைவரும், வரும் 9-ம் தேதி முதல் தினமும் பணிக்கு வர வேண்டும் என்று உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர்டி.கார்த்திகேயன், தொழில் நுட்பக்கல்வி இயக்குநர், கல்லூரிக் கல்வி இயக்குநர் மற்றும் அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் 2021-22-ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் (முதலாமாண்டு தவிர்த்து) ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் ஆன்லைனில் தொடங்கப்பட உள்ளது.
கரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல்
எனவே, அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் அனைவரும் அனைத்துவேலைநாட்களிலும் கட்டாயம் பணிக்கு வர அறிவுறுத்த வேண்டும்.மேலும், கல்லூரி வளாகங்களில் அரசின் கரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றி செயல்பட வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT