Published : 06 Aug 2021 03:19 AM
Last Updated : 06 Aug 2021 03:19 AM

ரயில்களில் வைஃபை வசதி நிறுத்தம் : ரயில்வே துறை அமைச்சர் தகவல்

ரயில்களில் வைஃபை வசதிவழங்குவதற்கு அதிக செலவு ஆவதால், இத்திட்டம் கைவிடப்படுவதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மக்களவையில் கேள்விகளுக்கு பதில் அளித்துமத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறிய தாவது:

செலவுகள் அதிகரிப்பு

ரயில்களில் பயணிகள் இணைய வசதி பெறுவதற்காக, கடந்த 2019-ம் ஆண்டு வைஃபை வசதி அறிமுகம் செய்யப்பட்டது. சோதனை முயற்சியாக, செயற்கைக் கோள் தொடர்பு தொழில்நுட்பம் மூலம் ஹவுரா ராஜ்தானி விரைவு ரயில்களில் இந்த வசதி வழங்கப்பட்டது.

இதனால், அலைவரிசைக்கான செலவுகள் அதிகரிக்கின்றன. தவிர, இதன்மூலம் பயணிகளுக்கு போதிய அலைவரிசை கிடைப்பதிலும் சிக்கல் நீடிக்கிறது. மேலும், ரயில்களில் குறைந்த செலவில் வைஃபை மூலமாக இணையசேவை வழங்குவதற்கான தொழில்நுட்பமும் நம்மிடம் இல்லை. எனவே, ரயில்களில் வைஃபை வசதி வழங்கும் திட்டத்தை கைவிட ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

‘ரயில் டெல்’ மூலம் வைஃபை

இருப்பினும், ரயில் பயணிகள்பயன்பெறும் வகையில் ரயில்வேயின் துணை நிறுவனமான ‘ரயில் டெல்’ மூலம் 6,000-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் வைஃபை வசதி அமைக்கப் பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் தெரிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x