Published : 05 Aug 2021 03:15 AM
Last Updated : 05 Aug 2021 03:15 AM
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்ய விரைவில் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது தற்போதைய முதல்வர் வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்த கடந்த ஆண்டு நவம்பர் 21-ம் தேதி ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து அவசரகதியில் சட்டம் ஒன்றை அதிமுக அரசு நிறைவேற்றியது.
தடை சட்டம் ரத்து
இந்த தீர்ப்பு வெளிவந்த உடனேயே, பொதுநலன் மிக முக்கியம் என்பதால், உரிய விதிமுறைகள் மற்றும் தகுந்த காரணங்களை தெளிவாக குறிப்பிட்டு, எவ்வித தாமதமும்இன்றி ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்யும் சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஆகவே, தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளை தடை செய்யும் புதிய சட்டம் விரைவில் கொண்டுவரப்படும்.
இவ்வாறு அறிக்கையில் அமைச்சர் கூறியுள்ளார்.
சட்டப்படிப்பு விண்ணப்பம் தொடக்கம்
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள 14 அரசுசட்டக் கல்லூரிகள், ஒரு சீர்மிகுசட்டக் கல்லூரி, ஒரு தனியார் சட்டக்கல்லூரி என 16 சட்டக் கல்லூரிகளில் 2,275 இடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் அனுப்புவது தொடங்கப்பட்டுள்ளது. ஆக.26-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடக்கும். அனைத்து மாவட்டங்களிலும் சட்டக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கு தற்போது ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்படும்.
7 பேர் விடுதலை
இவ்வாறு அமைச்சர் தெரி வித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT