Published : 05 Aug 2021 03:16 AM
Last Updated : 05 Aug 2021 03:16 AM

3 ஆண்டுகளில் : 96 அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு :

மக்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய நிர்வாகம் மற்றும் பயிற்சித் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது:

அரசு உயர் அதிகாரிகளுக்கு எதிராக பல்வேறு நீதிமன்றங் களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் ஊழல் அதிகாரிகள் 96 பேருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இதில் மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட அதிகாரிகளும் அடங்குவர். ஊழல் வழக்குகளில் தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.

இவ்வாறு அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x