Published : 05 Aug 2021 03:16 AM
Last Updated : 05 Aug 2021 03:16 AM
பெகாசஸ் விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் உட்பட 14 எதிர்க் கட்சிகள் சார்பில் நேற்று கூட்டாக அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பெகாசஸ் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மீது அவதூறு பரப்பும் வகையில் மத்திய அரசு நடந்து கொள்கிறது. நாடாளு மன்றத்தை முடக்குவதாக எதிர்க்கட்சிகள் மீது அரசு குற்றம் சாட்டுகிறது.
பெகாசஸ் விவகாரம் தொடர் பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடத்த வேண்டும். இதை ஏற்க அரசு மறுத்து வருகிறது. பெகாசஸ் விவகாரத்தில் விவாதம் நடத்த மறுத்து பிடிவாதமாகவும் ஆணவப் போக்குடனும் மத்திய அரசு செயல்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT