Published : 04 Aug 2021 03:19 AM
Last Updated : 04 Aug 2021 03:19 AM
பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்களுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இஸ்ரேலின் பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தி இந்தியாவில் எதிர்க்கட்சியினர், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோரின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து, இந்த விவகாரத்தை எழுப்பி நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. அரசு இதை ஏற்க மறுத்து வருகிறது.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்களுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது பெகாசஸ் உளவு விவகாரம், பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வு, புதிய வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து நாடாளுமன்றத்தில் இனி வரும் நாட்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள், திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இடதுசாரிகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது அவர்களுடன் சேர்ந்து ராகுல் காலை உணவை உட்கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT