Published : 04 Aug 2021 03:19 AM
Last Updated : 04 Aug 2021 03:19 AM
புதுடெல்லி: இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதலாக கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. பெருந்தொற்றை சமாளிப்பதில் தற்போது கைவசம் இருக்கும் ஒரே ஆயுதமாக தடுப்பூசி கருதப்படுவதால், அவற்றை அனைத்து தரப்பு மக்களுக்கும் செலுத்திவிட வேண்டும் என்பதில் மத்திய, மாநில அரசுகள் உறுதியாக உள்ளன. வரும் டிசம்பர் இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்நிலையில், நாடு முழுவதும் கடந்த திங்கள்கிழமை இரவு 7 மணி வரை ஒட்டுமொத்தமாக 47.85 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அன்றைய தினம் மட்டும் 61.09 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டோரில் 27.76 லட்சம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 4.82 லட்சம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT