Published : 04 Aug 2021 03:20 AM
Last Updated : 04 Aug 2021 03:20 AM

கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் திருநங்கைகளுக்கு பணி :

கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில், 2 திருநங்கைகளுக்குப் பணி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் 800-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்ப முடியாதவர்களுக்கு அங்கேயே கைத்தொழில் கற்றுத் தரப் படுகிறது. தோட்டக் கலை பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இந்நிலையில், ஒப்பந்த அடிப்படையில் 2 திருநங்கைகள் மனநல மருத்துவமனையில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதில், மனிஷா (வயது 27) டெலிபோன் ஆபரேட்டராகவும், வைஷ்ணவி (வயது 26) துாய்மைப் பணியாளராகவும் பணியாற்றி வருகின்றனர்.

இதுகுறித்து மருத்துவமனை இயக்குநர் பூர்ணா சந்திரிகாவிடம் கேட்டபோது, “2 திருநங்கைகள் முதல் முறையாக பணியில் அமர்த்தப் பட்டுள்ளனர். அவர்களின் பணி கள் சிறப்பாக உள்ளன. இவர்களை போல், மற்றவர்களும் பணியாற்ற அறிவுறுத்தி வருகிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x