Published : 04 Aug 2021 03:20 AM
Last Updated : 04 Aug 2021 03:20 AM
தொல்லியல் துறை கல்வெட்டுப் பிரிவில் உடனடியாக தமிழ் ஆய்வாளர்களை நியமிக்க வேண்டும்என்று மத்திய அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
உலக அளவில் உள்ள கல்வெட்டுகளில் 75 சதவீதத்துக்கும் மேலான கல்வெட்டுகள் தென் இந்தியாவில் மட்டுமே உள்ளன. இந்தியாவில், தமிழகத்தில் மட்டுமே அதிகப்படியான கல்வெட்டுகள் உள்ளன. தமிழகத்தில் கீழடி, கொந்தகை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், தாமிரபரணி ஆற்றுப் படுகையில் அகழ்வாராய்ச்சி தொடர்ந்து நடத்தக்கோரியும், பழங்கால அடையாளங்களை பாதுகாக்கக் கோரியும் பலர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இதற்கு பதிலளித்த தொல்லியல்துறை, ஏற்கெனவே 92 பாதுகாக்கப்பட்ட புராதன இடங்கள் உள்ளன. மேலும் 54 பாதுகாக்கப்பட்ட புராதன இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளது. இதுவரை 11 ஆயிரம்கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன என்றும், இன்னும் பல கல்வெட்டுகள் படியெடுக்கப்பட வேண்டும் எனவும் கூறியிருக்கிறது. அரசு உரிய கவனம் செலுத்தி இந்த கல்வெட்டுகளை படியெடுத்து வெளிக்கொணர வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
வேலை ஆட்கள் இல்லாமல் தொல்லியல் துறை முடங்கிப்போய் உள்ளது. கண்டெடுக்கப்பட்ட 74ஆயிரம் கல்வெட்டுகளை பிரதிஎடுக்கும் பணி முழுமைப் பெறவில்லை. படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் முழுமையாக நூல்வடிவில் வெளிவரவில்லை. தற்போது தொல்லியல் துறையில்758 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதில் ஒரு பதவி கூட கல்வெட்டுத் துறைக்கு ஒதுக்கப்படவில்லை. கல்வெட்டுத் துறை ஆய்வுகள் இல்லாமல் முழுமையான வரலாறு சாத்தியம் இல்லை. எனவேதொல்லியல் துறைக்கு தனிக் கவனம் செலுத்தி பணி நியமனங்களைஉடனடியாக உருவாக்கவேண்டும்.
கல்வெட்டுகளை படித்துப்பொருள் புரிந்து, வரலாற்றோடு இணைத்து நூல் வடிவில் வெளியிடும் திறமை கொண்டவர்கள் அருகி வருகின்றனர். இக்காலகட்டத்தில் கல்வெட்டு ஆய்வாளர்களை நியமித்து தமிழ் கல்வெட்டுகளை நூல் வடிவில் வெளிக்கொணர வேண்டும். எனவே, மத்தியஅரசு தொல்லியல் துறை கல்வெட்டுப் பிரிவில் உடனடியாக தமிழ் ஆய்வாளர்களை நியமிக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT