Published : 04 Aug 2021 03:21 AM
Last Updated : 04 Aug 2021 03:21 AM
மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகம் முழுவதும் 32 நுகர்வோர் நீதிமன்றங்கள் உள்ளன. மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களில் ஒரு தலைவர், 2 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். மதுரை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்துக்கு தலைவர், உறுப்பினர்கள் இல்லை. இதனால் வேறு மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி மற்றும் உறுப்பினர்கள் வாரத்தில் ஒரு நாள் மதுரை வந்து பணிபுரிகின்றனர். பெரும்பாலான நாட்கள் மதுரை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் செயல்படுவதில்லை.இதனால் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் விசாரிக்கப்படாமல் கிடப்பில் உள்ளன. எனவே காலியாக உள்ள நுகர்வோர் நீதிமன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர், இதேபோன்ற கோரிக்கையுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று கூறி விசாரணையை செப்.15-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT