Published : 04 Aug 2021 03:21 AM
Last Updated : 04 Aug 2021 03:21 AM

ஆடிப்பெருக்கை முன்னிட்டு - மதுரை கோயில் வாசல்களில் திரண்ட பக்தர்கள் :

ஆடிப்பெருக்கு நாளில் தொடங்கும் செயல்கள் வெற்றி பெறும் என்பதும், புதிதாக தொழில் தொடங்கினால் லாபம் பெருகும் என்பதும் நம்பிக்கை. இந்நாளில் பக்தர்கள் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்வதும், புது மணப் பெண்கள் புதிதாக மஞ்சள் கயிறு, மங்கலநாண் மாற்றிக் கொள்வதும் வழக்கம்.

விவசாயிகளும் ஆடிப்பெருக்கு நாளில் உழவுப் பணி, விவசாயப் பணிகளைத் தொடங்குவர். மேலும் புதிதாக வாகனங்களை வாங்குவர். தற்போது கரோனா பரவல் அச்சத்தால் ஆக.2 முதல் பக்தர்களுக்கு கோயில்களில் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப் பட்டது. மதுரை மீனாட்சியம்மன் கோயில், அழகர்கோவில், திருப்பரங்குன்றம், சோலைமலை முருகன் கோயில் உள்ளிட்ட இடங் களில் போலீஸார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதையடுத்து மீனாட்சியம்மன் கோயில் வாசல் முன்பு நின்று பக்தர்கள் வழிபாடு செய்தனர். புதுமணப் பெண்கள் தாலிக்கயிறை மாற்றிக் கொண்டனர். சிலர் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பும் நடத்தினர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மலைக்கோட்டை, பழநி மலை அடிவாரத்தில் உள்ள கோட்டை குளம் கரையில் பெண் கள் நெய் தீபம் ஏற்றி, புதிய மஞ் சள் கயிறு அணிந்து பூஜை செய்து வழிபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x