Published : 04 Aug 2021 03:21 AM
Last Updated : 04 Aug 2021 03:21 AM

விருதுநகர் அருகே கழிவுநீர் வாய்க்கால் கோரி - கிராம மக்கள் மறியல் :

விருதுநகர் அருகே கழிவுநீர் வாய்க் கால் வசதி கோரி கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் அருகே உள்ள மெட்டுக்குண்டு வடக்குத் தெருவில் ஏராளமான வீடுகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக கழிவு நீர் செல்ல வாய்க்கால் வசதி செய்து தரவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் தெருக்களைச் சூழ்ந்துள்ளன. இதனால் தொற்று நோய் அபாய மும் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஊராட்சி, மாவட்ட அலுவலகங்களில் பொதுமக்கள் பலமுறை மனு கொடுத்தும் நட வடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இருக்கன்குடி சாலையில் நேற்று மறியல் செய்தனர். இவர்களுடன் சூலக்கரை போலீஸார் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர் கள் பேச்சு நடத்தினர். இரு நாள்களில் கழிவு நீர் வாய்க்கால் அமைப்பதற்கான நடவடிக்கை களை மேற்கொள்வதாக அதி காரிகள் கூறினர். இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு பொது மக்கள் கலைந்து சென்றனர். சுமார் இரண்டரை மணி நேரமாக நடைபெற்ற இப் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x