Published : 04 Aug 2021 03:23 AM
Last Updated : 04 Aug 2021 03:23 AM
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மா.அரவிந்த் தலைமையில் 75-வது சுதந்திர தினவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்பேசியதாவது: குமரி மாவட்டத்தில் சுதந்திர தினவிழாவை சிறப்பாகநடத்த வேண்டும். நலத்திட்ட உதவிகள் பெற தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும். தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களுடன் தயார் நிலையில் இருத்தல் வேண்டும்.
சுகாதாரத்துறை மூலம் மருத்துவ வசதிகளுடன் கூடிய ஆம்புலன்சில் மருத்துவர்கள் தயாராக இருந்திட வேண்டும். கரோனா தடுப்பு நடவடிக்கையில் முன்களப் பணியாளர்களாக பணிபுரிந்த மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் அலுவலர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்க ஏற்பாடுசெய்யவேண்டும். அனைத்துத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து சிறப்பான முறையில் விழாவைநடத்தவேண்டும் என வலியுறுத்தினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, எஸ்.பி. பத்ரிநாராயணன், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண் டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT