Published : 04 Aug 2021 03:23 AM
Last Updated : 04 Aug 2021 03:23 AM

ஏலகிரி மலையில் - கோஷ்டி மோதல்; 26 பேர் மீது வழக்கு பதிவு :

ஏலகிரி மலையில் கோஷ்டி மோதல் காரணமாக, 26 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை முத்தனூர் கிரா மத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி ரமேஷ்(38). இவரது குடும் பத்தினருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை(42) என்பவரின் குடும்பத்தினருக்கும் இடையே, முன்விரோதம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ரமேஷின் தாயார் உண்ணாமலை(65) நேற்று முன்தினம் தனது உறவினருடன், இரு சக்கர வாகனத்தில் முத்தனூர் கிராமத்தில் இருந்து அத்தனாவூர் கிராமத்துக்கு சென்றனர்.

அப்போது, அவர்களை வழி மறித்த அண்ணாமலை உட்பட சிலர் உண்ணாமலையை தகாத வார்த்தைகளால் பேசி உருட்டுக் கட்டையால் தாக்கியதாக கூறப் படுகிறது. இதனால் ஆத்திர மடைந்த ரமேஷ் தரப்பினர், அண்ணாமலை வீட்டுக்கு சென்று தட்டிக்கேட்டபோது, இரு தரப்பி னருக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது.

இதில், ஒருவரை ஒருவர் உருட்டுக்கட்டையால் தாக்கி கொண்டனர். இதில், இரு தரப்பினரைச் சேர்ந்த 5-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து திருப்பத்தூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்து ஏலகிரி காவல் நிலையத்தில் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலை, அவரது மகன் பார்த்திபன், சுதாகர், திருப்பதி, வனிதா உட்பட 10 பேர் மீதும், அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில் ரயில்வே ஊழியர் மனோகரன் மற்றும் அவரது மனைவி காளி, ரமேஷ், பிரபாகரன், சண்முகம், மோகன் உட்பட 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x