Published : 03 Aug 2021 03:15 AM
Last Updated : 03 Aug 2021 03:15 AM
சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் நா.புவியரசன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் 3-ம் தேதி (இன்று) நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள், வடகடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழைபெய்யக்கூடும். 4, 5, 6-ம் தேதிகளில் இப்பகுதிகள் மட்டுமின்றி அனைத்து கடலோர மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT