Published : 03 Aug 2021 03:17 AM
Last Updated : 03 Aug 2021 03:17 AM
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் 12 நாள் களப பூஜை நடைபெறும். நடப்பாண்டு களப பூஜை நேற்று தொடங்கியது. திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் வழங்கப்பட்ட தங்கக் குடத்தில் சந்தனம், களபம், ஜவ்வாது, பச்சைகற்பூரம், பன்னீர், மற்றும் வாசனை திரவியங்களை நிரப்பி ஆகமமுறைப்படி சிறப்பு பூஜை நேற்று காலையில் நடைபெற்றது. தொடர்ந்து பகவதியம்மனுக்கு பால், பன்னீர், தேன், தயிர், இளநீர், களபம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் அம்மனுக்கு வைரக் கிரீடம், வைர மூக்குத்தி, மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.
கரோனா பரவல் அதிகரித்து வருவதால் கோயில்களில் வழிபாடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆடிகளப பூஜையில் பங்கேற்க பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. வரும் 13-ம் தேதி வரை 12 நாட்கள் தொடர்ந்து ஆடி களப பூஜை நடைபெறுகிறது. 14-ம் தேதி காலை 10 மணிக்கு உதயாஸ்தமன பூஜை மற்றும் அதிவாச ஹோமம் நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT