Published : 03 Aug 2021 03:17 AM
Last Updated : 03 Aug 2021 03:17 AM
திருவண்ணாமலை: தி.மலை ஆட்சியர் அலுவலகம் முன்பு சிவனடியார்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு சிவனடியார் எல்லப்பசாமி தலைமை வகித்தார். அப்போது அவர் பேசும்போது, "இந்து மதத்தை காத்த தமிழ்மொழியில், அனைத்து கோயில்களிலும் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும். கோயில்களில் ஆகம முறைப்படி சிவனடியார்கள் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும். தி.மலை கிரிவலப் பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலை சன்னதியில் பல ஆண்டுகளாக பூஜை செய்து வந்த என்னை வெளியேற்றியதற்கு நீதி வழங்க வேண்டும். திருநேர் அண்ணாமலையார் கோயிலில் பூஜை செய்ய தன்னை அனுமதிக்க வேண்டும்" என்றார். பின்னர், கோரிக்கை மனுவை ஆட்சியர் பா.முருகேஷிடம் வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT