Published : 02 Aug 2021 03:15 AM
Last Updated : 02 Aug 2021 03:15 AM

24 மணி நேரத்தில் 41,831 பேருக்கு கரோனா :

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது:

நாடு முழுவதும் நேற்று 41,831 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையானது நேற்று முன்தினம் பதிவான பாதிப்பை விட அதிகமாகும்.இதன் மூலம் நாடு முழுவதும் பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 10,952-ஆக அதிகரித்துள்ளது. இது, ஒட்டுமொத்த பாதிப்பில் 1.30 சதவீதம் ஆகும்.

நேற்று காலை 9 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் வைரஸ் பாதிப்புக்கு 541 பேர் உயிரிழந்தனர். இதனால் நாட்டில் கரோனா தொற்றுக்கு இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 24 ஆயிரத்து 351-ஆக உயர்ந்துள்ளது.

அதே சமயத்தில், ஒரே நாளில் கரோனா தொற்றில் இருந்து 39,258 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், நாடு முழுவதும் நேற்று 17.89 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 47.02 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x