Published : 02 Aug 2021 03:15 AM
Last Updated : 02 Aug 2021 03:15 AM

சுதந்திரம் போற்றும் ‘பெருங்காற்றே’ :

ஜி.வி.பிரகாஷ், ஏ.ஆர்.ராஜசேகர், ஆர்.டி.ராஜசேகர்

இந்தியாவின் 50-வது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான ‘தாய்மண்ணே வணக்கம்’ பாடல் நாடுமுழுவதும் பிரபலமானது. அதேபோல, வரும் 75-வது ஆண்டு சுதந்திரதின கொண்டாட்டத்தில், சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெருமைகளை போற்றும் விதமாக, ‘பெருங்காற்றே’ என்ற பெயரில் ஒரு பாடல் உருவாகிறது.இதை ஏ.ஆர்.ராஜசேகர் இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையில் அருண்ராஜா காமராஜா பாடல் வரிகளில் ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

தமிழில் தொடங்கி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஒரியா, மராட்டி, பெங்காலி, போஜ்புரி, பஞ்சாபி, குஜராத்தி, கொங்கணி ஆகிய 12 மொழிகளில் இப்பாடல் உருவாகிறது. நாட்டின் முன்னணி திரைக்கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் இதில் பங்குபெறுகின்றனர். கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் இப்பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகள், காட்சி ஊடகங்களிலும் இப்பாடல் திரையிடப்பட உள்ளது. பாடலின் முதல் தோற்றம் (ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்) செப்டம்பர் 5-ம் தேதி கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது ஆண்டு பிறந்தநாள் விழாவில் வெளியிடப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x