Published : 02 Aug 2021 03:15 AM
Last Updated : 02 Aug 2021 03:15 AM
ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட தொப்பம்பட்டி, கள்ளிமந்தயம் ஆகிய ஊர்களில் பொதுமக்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் அர.சக்கரபாணி பேசியதாவது:
தமிழகத்தில் குடும்ப அட்டை கேட்டு 7 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விண்ணப்பித்திருந்தவர்களில் 3 லட்சம் பேருக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் குடும்ப அட்டை கேட்டு 19,819 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஜூலை வரை 17,746 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 2,073 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. தற்போது 10,958 குடும்ப அட்டைகள் அச்சிட்டு வரப்பெற்றுள்ளன.
தமிழகத்தில் வாடகை கட்டிடத்தில் இயங்கும் நியாய விலைக் கடைகளை விரைவில் சொந்த கட்டிடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பழநி வருவாய் கோட்டாட்சியர் ஆனந்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் பழனிக்குமார், தொப்பம்பட்டி ஒன்றியக் குழுத் தலைவர் சத்தியபுவனா ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பொன்ராஜ் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT