Published : 02 Aug 2021 03:16 AM
Last Updated : 02 Aug 2021 03:16 AM

ரியல் எஸ்டேட் அதிபா் வீட்டில்4 கார்கள், 3 பைக் எரிந்து சேதம் : பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா என போலீஸ் விசாரணை

மேடவாக்கம்

ரியல் எஸ்டேட் அபரின் வீட்டில் 4 கார்கள், 3 இருசக்கர வாகனங்கள் திடீரென தீயில் கருகின. தொழில் ரீதியான போட்டியால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா என போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை மேடவாக்கம், டாக்டர் விமலா நகர் 3-வது பிரதான சாலையில் ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் கவுதம் அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று அதிகாலை 4:30 மணியளவில் வீட்டின் முன்பு வெளிச்சமாக இருப்பதைப் பார்த்த கவுதம் வெளியே வந்து பார்த்தபோது அவருடைய வாகனங்கள் தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர், மேடவாக்கம் தீயணைப்பு நிலையத்துக்கும் பள்ளிகாரணை காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தார். தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

விசாரணையில் கவுதம் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருவதும், அவருடைய மகன் பழைய கார்களை விற்கும் தொழில் செய்து வருவதும் தெரியவந்தது. வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 சொகுசு கார் உள்ளிட்ட 4 கார்கள், 3 இருசக்கர வாகனங்கள் தீயில் கருகியதும் தெரியவந்தது. பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை கவுதம் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காா்கள் மீது வீசிவிட்டு தப்பியோடியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்துக்கு தொழில் போட்டி காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என்று பள்ளிக்காரணை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x