Published : 02 Aug 2021 03:16 AM
Last Updated : 02 Aug 2021 03:16 AM

திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை :

திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்ததால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திருவள்ளூர், திருவாலங்காடு, பொன்னேரி, பூந்தமல்லி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது. நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மிட்டரில்): திருவாலங்காடு 27, சோழவரம் 21, பூந்தமல்லி 17, பூண்டி 14, திருத்தணி 12, திருவள்ளூர் 10, பொன்னேரி 7, செங்குன்றம் 7, ஊத்துக்கோட்டை 4, ஆர்.கே.பேட்டை 3, கும்மிடிப்பூண்டி 2. மாவட்டத்தில் சராசரியாக 8.85 மி.மீ. மழை பெய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x